வியாழன், 7 நவம்பர், 2019

216. (785 ) அலைபாயாதே!







அலைபாயாதே!


(ஆடகம்- பொன், ஈடழிதல்-சீர்கெடுதல், யாப்பு-கட்டு)

ஊடக வெளிச்சத்தில் பெண்கள்
ஆடகப் பொற்பாவை ஆகலாமென
ஈடழிதல் நவீன உண்மையாக
நாடகங்கள் யுரியூப் ஊடகத்தில்.

பெண்ணின் மானத்தைச் சந்தியிலிட்டு
உண்டு இல்லையென ஆக்குகிறார்.
பெண்ணே தன்னைப் பவுத்திரமாகக்
கண்ணாய்க் காத்தல் அரண்.

பெற்றவர் கடன் நல்லவற்றைப்
பற்றுடன் இடித்துக் கூறுவது.
கற்று உயராது திமிரடைதல்
அற்ப ஊடகங்களால் சீரழிதலே!

யார் யாரைக் காப்பது!
யானே எனக்குக் காவலன்!
யாப்பு இறைவனும் தியானமும்
யானாகிய உன்னை நம்பு.

 10-10-2019




1 கருத்து:

494 (1036) கவியரங்கம் எனது 10வது

             நிலாமுற்றம் தொடர் நிகழ்வாகக் கவியரங்கம் நடந்ததில் சிலவற்றில் நான் கலந்து கொண்டேன். வேதாவின் வலை ஒன்றில் கவியரங்கம் நிகழ்வில் 6...