வெள்ளி, 15 நவம்பர், 2019

221. (790 ) பக்குவ மனம்







பக்குவ மனம்

சங்கீத மனதின் அபசுரம் 
சங்கடமாக்கும்  சுப சுரத்தை
சந்தேக சுரம்  கீதம் சிதைக்கும்.
சுக தேகத்து ஆரோக்கியம் பகைக்கும்.
நம்பிக்கை கீதம் ஆரோகணிக்கட்டும்.
அவநம்பிக்கை நாதம் அவரோகணிக்கட்டும்

அனுபவத்தோடு அறிவு பிறக்கும்.
அகங்காரமழிந்து  அன்பு  தவழும்.
அறங்கள் கூடுமென்றால் மனிதம்
சிறந்ததைத் தினமும் கைப்பற்றலாம்.
உறவாடும் வழியில் குறளியாடும்
உறுத்தல்கள் முற்றாக அழிக்கலாம்.

பிரேமையானவன் பிரேமை தேடுவான்.
பிரச்சனையானவன் பிரச்சனை தேடுவான்.
பிரயோசனப் பொழுது நற் பிரசாதமாகும்.
பிரதிக்னையோடு பக்குவம் பெறலாம்.
பிரயோசன வாழ்வின் பிரார்த்தனைகள்
பிரவாகமாகி நற் பலன் பெறும்.

விலங்கிலிருந்து விடை கொடுக்க
கலங்குபவனுக்குக் கை கொடுக்க
பலவீனனுக்குப் பலம் கொடுக்க
பக்குவ மனது அடியெடுக்கும்
பக்குவ மனதுப் பதறாத நிதானம்
சிக்கலின் போதும் சிதறாத விதானம்.

  2004

In tamil authors.com




Thank you...



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

423 (962) ஊடகம் -- தடம் தீட்டு