ஞாயிறு, 17 நவம்பர், 2019

224 . (792 ) மூளை.






மூளை.

கருவூர் அதிசய மந்திர   ஊர்.
குருத்தாக மூளையின் முதல் துளிரங்கு
கருவினுள்ளே  மனித மூளை வெகு
கருத்துடன்   விதைக்கப் படவேண்டும்.
உருவான  முதல் விளைச்சலின்  இயக்கம்
இரு நிலத்து அற்புதம் குவாகுவா சத்தம்

கால்கள் மடித்துத் தவழும் இயக்கம்
கால் எடுத்து மழலை நடத்தல்
கால   நேரத்தில் நிகழாவிடில்
பாலம் அமையுங்கள் நரம்பியல் வைத்தியருடன்.
நலமான மருத்துவச் சிகிச்சையிலும் மேலாக
சூழல் மூளையின் சிறப்புத் தோழன்.

மூளையின் மோசமான எதிரி சோம்பல்
களைவிடும் கோபம் வாழ்நாள்  விரோதி
மூளையிலிருந்து   வன்மம், பேராசை, பொறாமையைக் கிள்ளுங்கள்.
மூளைக்கு ஓய்வெனும் அட்சய பாத்திரம் வாசிப்பு.
காளை போன்ற சுறுசுறுப்பே நோயின் கவசம்.
மூளைக்கும் உடலிற்கும் ஆன்மிகம் சர்க்கரைப்பொங்கல்.

வரம்பற்ற மனவலிகள், இரத்த ஓட்டம்
நரம்புத் தொகுதியைப் பலிகொள்ளும்.
சரமான தலைவலி,   பக்கவாதம், வலிப்பிற்கு
உரமான  சிகிச்சையளித்தல்   மூளைக்கு நலம்.
நேராக மனம்விட்டுப் பேசுதல் பொன்.
பாராத தொலைபேசிப் பேச்சு பித்தளை.

யோகா, உடற்பயிற்சி மனவலிக்கு
யோகம் தரும் சுக நிவாரணி.
வருவது வரவே செய்யுமெனும்,
எல்லாம் நன்மைக்கே - எனும் மொழி
நல்ல மன ஒத்தடமாகும்.  பிரச்சனைகளை வெல்ல
மனஒத்தடற்களின் பின் அணுகுதல் சுலபம்.

29-3-2009.
ரிஆர்ரி தமழ்ஒலியில்  31-5-2009ல் வெளியானது.





1 கருத்து:

  1. அன்புடன் சந்தோஷ்:- அருமையான பதிவு

    Vetha Langathilakam :- அன்புடன் மகிழ்ச்சி

    பதிலளிநீக்கு

423 (962) ஊடகம் -- தடம் தீட்டு