ஞாயிறு, 1 மார்ச், 2020

257. (820 ) திறமைக்கு ஒரு வாழ்த்து. + அதுவா இதுவா.....









திறமைக்கு ஒரு வாழ்த்து.

கவிதை வரைதல் ஒரு சிறப்பு
கவினுற வாசித்தல் சிறப்பிற்குச் சிறப்பு
தமிழின் தவறில்லா உச்சரிப்புகள், 
தரிக்கும் முற்றுப் புள்ளி, அரைப்புள்ளிகள், 
உணர்வின் எதிரொலிப்புகள், கேள்விக் குறிகள்
உருக்கி வார்க்கும் கவிதைக்கு அழகுகள்.

வாசிப்பது யார் என் கவிதை என்று 
யாசிப்பதில்லை யான் வேண்டுகோளென்று.
திறமை அனைவரிடமும் உண்டு
திரட்டிச் செதுக்கலாம் நாம் கண்டு.
விமரிசனங்களால்,  விளக்கங்களால்
விருத்தியாகலாம் அவர் திறன்கள்.

கடந்த என் கவிதைக் கிரீடம் - பந்து
கிடந்து மனம் அடித்தது தொடர்ந்து
எப்படி வாசிப்பார் எவர் வாசிப்பாரென்று
அப்படியே திரட்டி அருத்தம் தந்தீர்
அழகு அற்புதம், ஆனந்தம் திருப்தி
நன்று வாசிததீர் நல் வாழ்த்துகள்.

14-6-2003


வேறு





அதுவா இதுவா.....

நுரைக்கும் செந்தமிழின்
உரைக்கும் மொழி ஆர்வம்,
தெளிந்த உச்சரிப்பு,
மிளிர்ந்த குரலிசைவு,
கொடுக்கும் விடயத்தெளிவு,
தொடுத்து விதைக்கும் கம்பீரம்,
மிடுக்காக வானொலிச் செய்தியில்
கொடுக்கும் வெற்றிமாலை.

நற்சிந்தனை வாசிப்பு
சொற்சிந்தனைக் குவிப்பு.
இலக்கியத் தமிழ் விரிகை
துலக்கும் தமிழ் சருகை.
நவரசக் குழைவுக் கலவை
நாடகம்கட்டும் களை.
செய்தி வித்தகப் பாணி
பெய்யும் இலக்கியப் பணி.

நற்சிந்தனை வேறொரு பாணி
அதுவா இதுவா எதுவும் பொதுவா
விரல்களைந்தும் இணைவாய்
வித்துவக் கவிபுனைவாய் அணையாய், 
அரணாய், அதிரசமாய் அமுதமாய்
ஊடகத்தமிழை ஊடாடச் செய்வோம்.
கூடகமின்றி இனிதாய் ஆடகத்தமிழோடாடுவோம்.
அறிவோடுறவாடி அறுகெனப் படர்ந்தாடுவோம்.

(கூடகம்- வஞ்சகம்.   ஆடகம் -தங்கம். துலக்கும்-மெருகிடுதல்.
குளை – அpகு. முpளிர்- பிரகாசி)

14-6-2003.
















1 கருத்து:

423 (962) ஊடகம் -- தடம் தீட்டு