செவ்வாய், 26 நவம்பர், 2019

225 . (793 ) மனச்சுடர்த் தெறிப்பு (ஊடகம்)





மனமார்ந்த நன்றியும் வாழ்த்துகளும் காற்றுவெளி சஞ்சிகைக்கு.

மனச்சுடர்த் தெறிப்பு

களவொழுக்கம் களவாகத்தான் இருக்க வேண்டும்.
அளவின்றிக் கதவு திறந்தால்
பிளவுஇ இழவின் வளவே.
00
ஊனமனங்கள் சுதந்திர 
வானத்தை விரிக்க முடியாது.
ஈனப் பாதையை மறக்கவும் முடியாது.
01
ஒரு மனதாலும் உடலாலும்
ஒருவர் பிடிக்குள் அடங்குதல்
பெரும் சிறை தான்
அருமைச் சுதந்திரம் பேரின்பம்.
00
தொல்லையின்றித் தானாகக் காம்பு
தொடர்பு இழப்பது போல
சொல்லாமல் தானே வரும்
வெல்ல முடியுமா மரணத்தை!
00
உலகக் கடல் மொழியாக
படரும் பித்தலாட்டம்இ ஏமாற்று
சுடரும் சூரியனாய்ப் பிரகாசிக்கிறது.
00
ஓடி ஓடித் தழுவுமலை
நாடியும் ஏற்காத போதும்
தேடித் தேடி வருகிறதே பூமியை
வாடித் தளராதோ கோபத்தில்!
வாடினும் தூக்கம் வராவிடிலும்
தேடி உருள்வதேனோ நித்திரைக்காகவோ!
00

 11-11-2019




1 கருத்து:

494 (1036) கவியரங்கம் எனது 10வது

             நிலாமுற்றம் தொடர் நிகழ்வாகக் கவியரங்கம் நடந்ததில் சிலவற்றில் நான் கலந்து கொண்டேன். வேதாவின் வலை ஒன்றில் கவியரங்கம் நிகழ்வில் 6...