திங்கள், 11 ஜனவரி, 2021

323. (886) ஓலைக்குடிசை

 







ஓலைக்குடிசை


நம்பிக்கை உயர்வு உழைப்பு நிறைவு

தும்பிக்கையாகுமொரு  ஏழைக்கு சொந்தக்குடிசை 

அம்சமது! ஓலைக் குடிசையானாலென்ன  வெற்றி

துவம்சம் செய்யாதோ உலகத் துன்பங்களை


உள்ளம் குளிரும் மனவமைதி எளிமை

அள்ளி மெழுகிய காணியின் பசுமை

கிள்ளித் தூவிய கோலத் தூய்மை

துள்ளும் உள்ளம் வெள்ளிச் சாரலாய்


மாமர நிழல் மாலையின் மருதம்

மாமண்டப உணர்வாளன் ஏழை பங்காளன்

மாகாணம் ஆளும் மானஸ்தன் மனதினில்

மாரியில் வேதனை மாமழை தரும்.


30-11-2016





1 கருத்து:

  1. Anu Raj
    மாரியில் வேதனை தரும் ஏழைக்கு...குடிசையும் சொந்தமானதொரு அம்சமே.
    வாழ்த்துகள்...
    2016
    Vetha Langathilakam
    mika nanry. makilchchy sakothara.
    2016

    பதிலளிநீக்கு

423 (962) ஊடகம் -- தடம் தீட்டு