வெள்ளி, 15 ஜனவரி, 2021

328. (891) எனக்கு வேணும் இந்த வீடு! - பொய்க்கால் குதிரை

 


எனக்கு வேணும் இந்த வீடு!

நான் வாங்குகிறேன் இந்த வீடு!
நாட்டுப்புற வாடையோ டமைந்த கூடு!
நானிலத்தி லொரு நிலமிது பாடு!
நாற் பொருளையும் அனுபவிக்க ஏற்ற வீடு!
துளசி மாடத் துணையோடு வயற்காடும்
துள்ளும் உள்ளத்தோடு வரப்பு ஆசனமும்
துணையாய் எழுதுகோலும், துயிலா மனமும்
துயரமின்றித் தொடுப்பேனே கவிதை நாணை!
23-3-2016
(நானிலம்:- குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல்.
நாற்பொருள்:- அறம், பொருள், இன்பம், வீடு.)









பொய்க்கால் குதிரை

பொய்க்காலில்  நடப்பவரே படும்பாடு!
பொய்க்கால் குதிரை ஆட்டம் கலை
புறத்தோற்றம் குதிரையாலான மரக்காலாட்டம்
புரவியாட்டம், புரவிநாட்டியமெனவும் அழைப்பார்

இராசா இராணி வேடத்தில் ஊர்வலத்தில்
இசைக்கருவி  நையாண்டி மேளத்தில்
இரசித்து ஆடுமிது தஞ்சாவூரில் பிறந்ததுவாம்
இரசிக்குமொரு கிராமியக் கலையாம்.

2018










1 கருத்து:

423 (962) ஊடகம் -- தடம் தீட்டு