திறப்பெனும் நம்பிக்கை.
காற்றோடு பேசும் மரம்
தோற்றிடுமோ பேசாத மரம்
ஆற்றோடு பேசும் கரை
ஊற்றோடு உருளும் கூழாங்கல்
ஆற்றொழுக்கால் அழகாக அமையும்.
00
நட்பை அழிக்கும் கொலைக்காடு.
உறவை அழிக்கும் வன்மக்காடு
பறவைச் சிறகொடிக்கும் உலகு
திறமை கண்டு பொறாமையால் எரியும்.
சிறந்தோர் மனவியல்அமைதியில் படியும்.
00
நெஞ்சையள்ளும் மனிதநேயம்
சொந்தப் பாதை நடையில் கவனமாய்
பந்தமெனும் பிற உறவுகளை அலட்சியமாய்
அந்தமென்பது தனிப்பாதை என்பதாய்
இந்த உலகு மாறிவிட்டது. 9-10-2021
00
இறைவனா விதியா கர்மத்தின் நியதியா
விதி வலியது...மதிக்கும் கடமை யுண்டு
அழியும் வாழ்வு அழுகையைத் தள்ளிடு
பிறப்பில் தொடங்கி சிறப்பாய்க் கையிலெடு
திறப்பெனும் நம்பிக்கையை உறுதியாய் உயர்வாய்!
வேதா. இலங்காதிலகம். தென்மார்க் 25-5-2021
uploading 20-4-2025.
Kanagasegaram Vimalasegaram
பதிலளிநீக்குphoto wish 21-4-2025
Sujatha Anton
இறைவனா விதியா கர்மத்தின் நியதியா
விதி வலியது...மதிக்கும் கடமை யுண்டு
அழியும் வாழ்வு அழுகையைத் தள்ளிடு
பிறப்பில் தொடங்கி சிறப்பாய்க் கையிலெடு
திறப்பெனும் நம்பிக்கையை உறுதியாய் உயர்வாய்! கருத்தாளம் மிக்க வரிகள் வளர்க தமிழ்" கவிதாயினி வேதா" 21-4-25
Kugaananthaletchumy Ganeshan
அருமை.அர்த்தமுள்ள அழகிய கவி.
21-4-2025