செவ்வாய், 7 மே, 2019

90. (669) . பழைமைக்கு உயிர் கொடுப்போம்






 பழைமைக்கு உயிர் கொடுப்போம் 

( மட்பாண்டம் - பொதுவாக மண்ணால் செய்யும் பொருட்கள்) பனையோலைஇ மூங்கிலால் பின்னும் வினைகளுயர சிறுகைத்தொழில் உயர்த்துவோம். மனையொளிர நெகிழியுதைத்து சிறுதானியமுண்போம். மட்பாண்டமும்இ சித்தவைத்தியமும் புழங்குவோம். காலையிலெழுந்து கடவுளை வணங்குவோம். மாலையிலெம் வயலோரம் சிறுவரோடுலாவுவோம். வேலையோடு திருக்குறள் ஒளவை மொழியோடு பழைமை வாழ்வூட்டுவோம். ஒருவனுக்கொருத்தியெனும் ஒழுக்க வாழ்வுப் பெருமையோடு கூட்டுவாழ்வை ஊக்குவோம். பெருவிருப்போடு தருக்கள் ஊன்றுவோம். சுற்றுசூழல் பாதுகாப்பில் மழையேந்துவோம். பாலோடு பழைமையை பசுமையை பாலவயதில் ஊட்டுவோம். ஐந்தில் வளைப்பது ஐம்பதிற்கேகும். 8-1-201 



1 கருத்து:

  1. Subajini Sriranjan:- நல்ல சிந்தனையுள்ள
    பா நல்ல ஞாபகங்கள் வந்து போகிறது

    Vetha Langathilakam
    photo thanks

    Viny Pathmanathan :- அருமையான பதிவு
    2017
    Vetha Langathilakam
    photo thanks
    Subi Narendran:- நல்ல கருத்தினை கூறும் அருமையான கவிதை. வாழ்த்துக்கள்.

    Sujatha Anton:- ஒருவனுக்கொருத்தியெனும் ஒழுக்க வாழ்வுப்
    பெருமையோடு கூட்டுவாழ்வை ஊக்குவோம்.
    பெருவிருப்போடு தருக்கள் ஊன்றுவோம்.
    சுற்றுசூழல் பாதுகாப்பில் மழையேந்துவோம். அருமையான வரிகள் வாழ்க தமிழ்.!!!!!!!!
    2017
    Vetha Langathilakam
    photo thanks

    பதிலளிநீக்கு

423 (962) ஊடகம் -- தடம் தீட்டு