தமிழ்த்தென்றல்
பூமதீன் கலந்தர் · April 26, 2017 ·
வேதா . இலங்காதிலகம் டென்மார்க்
00
வந்த நிலை மறவாதே.
சொந்த நிலை மறந்து புதிதாய்
வந்த நிலையால் தலைப்பாரம் ஏறி
மந்தபுத்தி மகாகர்வியாகவும் மாறி ஒரு
விந்தை நிலைக்குச் செல்வார் சிலர்.
நிறைகுடம் தளும்பாது என்பார் ஒரு
குறைகுடம் தளும்பும் என்பது வழக்கு
குணத்தில் பொறுமை தரும நெறியுடையார்
கணமேனும் மாறார் நிதான நிலையுடையார்.
எதை நாம் கொண்டு வந்தோம்
அதை இங்கு நாம் இழப்பதற்கென்பது
கீதாச்சாரம். அனைத்தும் மறந்து உணராமையால்
வதைபடுகிறோம் இவ்வுலகில் என்றும் நாம்.
சோகங்களால் அழுந்தப் புதைந்து வருந்தி
பாகமான மகிழ்வை இழந்து புலம்புகிறோம்.
தாகமாய் அறிவைப் பெற்றும் நன்மையாக
பாகம் பிரித்துப் பயனடைய மறக்கிறோம்.
புகழ் வந்திடினும் நம்மைப் பிறர்
இகழ் நிலை கொள்ளாது அடக்கம்
அகழ்ந்து புதைக்காது பிறர் மதிக்கத்
திகழ்ந்திடுதல் நானிலம் போற்றும் நற்பண்பாகும்.
மனம் உறுதியானால் வெற்றியும் தோல்வியும்
கனதியான மாற்றங்களை எம்முள் ஏற்படுத்தாது.
தினமும் எந்த நிலை வந்தாலும்
சினமின்றி வந்த நிலை மறவாதிருப்போம்.
போதுமெனும் மனநிலையும் எந்த நிலை
வந்தாலும் எமது வந்த நிலை
மாற்றாது. அளவோடு இதயம் நிறைவாக்கும்
நல்ல பல அடிப்படைகள் மனிதமுடையன
Vetha Langathilakam
பதிலளிநீக்குபூமதீன் கலந்தர்
Author
Admin
4-2017
Razak Syed Ziavudeen
வாழ்த்துக்கள்
2017-4-
Premkumar Prajana
வாழ்த்துகள் மா
4-2017
Sivaraman Krishnapillai
வாழ்த்துக்கள்
4-2017
Sarala Vimalarajah
பதிலளிநீக்குஅருமை அக்கா
4d
Reply
Stella Paulraj
Congratulations 💕❤️
4d
Reply
Sandradevi Thirunavukkarasu
வாழ்த்துக்கள்
4d
Reply