புதன், 5 மார்ச், 2025

452 (996) மௌன நாடகம்

 


              




   மௌன  நாடகம்


கவ்வி  முற்றாகக் பிடித்துச் சுடரெறியும்

00

பண்போடு விருப்பம்  அழுத்தாமலும்

பண்டிதர் மௌனித்து வாசிப்பார்.

சண்டியர் நினைவு மனதுள்

பண்டிதம் விடாது கருத்திட

கண்டதும் சிரித்துக் கையசைப்பார்

00

பண்டாரி அப்பு தவறாமல்

பண்டு முறைப்படி வாழ்த்திடுவார்.

பண்ணமைத்தும் மகிழ்வு பதிவார்.

உண்மையில் மலிவுப் பதிப்பாளரல்லர்.

பண்புடையார் போலவர் உறவு.

00

எங்கு மனம் அன்பால் தோய்கிறதோ

அங்கு சண்டித்தனம் துளியுமணையாது

பொங்கும் அன்பணைப்பு மலர்ந்து விரியும்.

தங்காது முரண்பாடு தவிடுபொடியாகும்

ஏங்காது இணக்கமுடைய மனது

00

கவிநட்சத்திரம் - வேதா. இலங்காதிலகம் -  தென்மார்க் -   5 -3- 2025



   



1 கருத்து:

  1. Sarala Vimalarajah
    இனிய வாழ்த்துகள் அக்கா
    3d
    Reply
    Sujatha Anton
    எங்கு மனம் அன்பால் தோய்கிறதோ
    அங்கு சண்டித்தனம் துளியுமணையாது
    பொங்கும் அன்பணைப்பு மலர்ந்து விரியும்.
    தங்காது முரண்பாடு தவிடுபொடியாகும்
    ஏங்காது இணக்கமுடைய மனது
    3d
    Reply
    Sujatha Anton
    அழகு தமிழ் வரிகள். ""கவிதாயினி வேதா""
    3d
    Reply

    பதிலளிநீக்கு

494 (1036) கவியரங்கம் எனது 10வது

             நிலாமுற்றம் தொடர் நிகழ்வாகக் கவியரங்கம் நடந்ததில் சிலவற்றில் நான் கலந்து கொண்டேன். வேதாவின் வலை ஒன்றில் கவியரங்கம் நிகழ்வில் 6...