ஞாயிறு, 23 மார்ச், 2025

458 (1002) ஆசீர்வாதம் சிறப்பான செல்வம் (மகிமையின் ஐசுவரியம்)

      


         


    



        



ஆசீர்வாதம் சிறப்பான செல்வம்
(மகிமையின் ஐசுவரியம்)

னது கவிதையை வாசிக்க முதல் இதை வாசியுங்கள்.
மார்கண்டேயனுக்கு 12 ஆவது வயதில் மரணம் சம்பவிக்கும் என்றும் அவனுக்கு அல்பாயுசு தான் என்றும் அவன் தந்தையான மிருகண்ட மகரிஷிக்கும் தெரியும்.
ஆகையால் மகனை காக்க விரும்பிய மிருகண்ட முனிவர், அவனுக்கு உபநயனம் செய்வித்த பின்னர், பெரியோர்கள் எவரை சந்தித்தாலும் தயங்காது அவர்கள் காலில் விழுந்து நமஸ்கரித்து அவர்களது ஆசிகளை பெற்று வருவாயாக' என்று பணித்தார்.
மார்கண்டேயனும் அதே போல தான் பார்க்கும் பெரியவர்கள் காலில் விழுந்து விழுந்து ஆசி பெற்று வந்தான்.
சப்த ரிஷிகள் ஒருமுறை மிருகண்ட முனிவரின் ஆஸ்ரமத்திற்கு வந்தபோது, மார்கண்டேயன் இவ்வாறு அவர்களிடம் வீழ்ந்து ஆசி பெற, அவர்களும், 'தீர்க்கா யுஷ்மான் பவ' என்று வாழ்த்திவிட்டார்கள்.
பிறகு தான் தெரிந்துகொள்கிறார்கள் அவனுக்கு 12 வது வயதில் மரணம் சம்பவிக்கும் என்று. என்றும் சத்தியத்தையே பேசும் சப்தரிஷிகளின் வாக்கு பொய்க்குமா?
இருப்பினும் இந்தப் பிரச்னையை பிரம்மாவிடம் கொண்டு செல்கிறார்கள். அவரிடமும் விழுந்து ஆசி பெறுகிறான் மார்கண்டேயன். அவரும் அதே போல ஆசி வழங்கிவிடுகிறார்.
இப்படி பார்க்கும் பெரிவர்கள் எல்லாம் அவனுக்கு ஆசி வழங்கவே அவர்கள் ஆசி அனைத்தும் சேர்ந்து அவனது தலையெழுத்தையே மாற்றிவிடுகிறது.
பெரியவர்களின் ஆசியை நிறைவேற்றுவது பரம்பொருளின் கடமையல்லவா? ஆகவே தான் சிவபெருமான் தோன்றி மார்கண்டேயனை காத்ததோடு மட்டுமல்லாமல் அவன் என்றும் 16 அதாவது சிரஞ்சீவியாக இருப்பான் என்று வரமும் தருகிறார்.
பெரியோர்களை விழுந்து வணங்குவது என்பது நமது பாரம்பரியங்களில் ஒன்று. பகவான் கிருஷ்ணர் தம்மினும் பெரியோர்களை கண்டால் தவறாது விழுந்து வணங்குவார்.
எனவே வயதிலும் தகுதியிலும் சிறந்து விளங்கும் பெரியோர்களை கண்டால் அவர்களை விழுந்து வணங்கி அவர்களது ஆசியை பெறவேண்டும். அது உங்களை காக்கும் அரண் மட்டுமல்ல... உங்களது தலையெழுத்தையே மாற்றவல்லது.
எனவே வயதிலும் தகுதியிலும் சிறந்து விளங்கும் பெரியோர்களை கண்டால் அவர்களை விழுந்து வணங்கி அவர்களது ஆசியை பெறவேண்டும். அது உங்களை காக்கும் அரண் மட்டுமல்ல... உங்களது தலையெழுத்தையே மாற்றவல்லது.
(இணையத்திலிருந்து எடுத்தது)
00
எனது கவிதை -

மனப்பூர்வமான ஆசீர்வாதம் மாபெரும் சக்தி
தனம் நிறை மலர் மழை
மனிதனின் வயது ஏற ஏற
புனித ஆசி வாழ்த்திற்கு மதிப்பும்
கனதி பலம் சக்தியும் உண்டு.
தூண்டாமணி விளக்காகும் நல்லாசி (ஆசீர்வாதம்)
00
கால்களைத் தொடுதலால் புத்தி அறிவு
மேலான வலிமை புகழ் பெறலாம்.
தலையெழுத்தை மாற்றுமாம் பெரியவர் ஆசி
ஆசியின் பாதச்சுவட்டில் மலர்கள் மலரும்.
ஆசீர்வாதப் பூக்களின் தூவல் வாழ்வை
நேர்சீரான வானவில் நிறமாக்கும்.
00
ஆசீர்வாதம் பெறுதல் சிறந்த பண்பாகும்
தூசியாக இன்றிது ஆகியது சோகம்.
மோசமான உலகு நிலையே இது.
நேசிக்கும் பண்டைய வழக்குகள் காரணமின்றி
வீசுதல் முறையாமோ! நியாயாம் ஆகுமோ!
அருள்வாழ்த்து தலையெழுத்தையே மாற்றுமாம்.
00
கவி வித்தகர் - வேதா.இலங்காதிலகம் தென்மார்க்
23-3-2025





2 கருத்துகள்:

  1. Janaki Sreenivasulu
    GIF
    23-3-2025
    Rama Sampanthan
    அருமை சிறப்பு

    Sujatha Anton
    கால்களைத் தொடுதலால் புத்தி அறிவு
    மேலான வலிமை புகழ் பெறலாம்.
    தலையெழுத்தை மாற்றுமாம் பெரியவர் ஆசி
    ஆசியின் பாதச்சுவட்டில் மலர்கள் மலரும்.
    ஆசீர்வாதப் பூக்களின் தூவல் வாழ்வை
    நேர்சீரான வானவில் நிறமாக்கும்.
    21h

    Vetha Langathilakam
    Sujatha Anton mikka nanryf - flower wish
    May be an image of flower and text that says 'வாழ்க வளமுடன்'
    19h

    அற்புதமான கவிவரிகள் "கவிதாயினி வேதா" வாழ்த்துக்கள்!!
    21h

    பதிலளிநீக்கு

494 (1036) கவியரங்கம் எனது 10வது

             நிலாமுற்றம் தொடர் நிகழ்வாகக் கவியரங்கம் நடந்ததில் சிலவற்றில் நான் கலந்து கொண்டேன். வேதாவின் வலை ஒன்றில் கவியரங்கம் நிகழ்வில் 6...