ஞாயிறு, 9 மார்ச், 2025

455 (999) சான்றிதழ்கள் கவிதைகள் ---2

 

           சான்றிதழ்கள் கவிதைகள்  ---2


          தமிழன்னை தமிழ்ச்சங்கம்

00
தலைப்பு - அன்னையே என் தமிழ்த்தாயே!

வள்ளுவர் கம்பர் பாரதி ஒளவை
அள்ளிப் பரப்பிய ஆதி மொழி
கள்ளெனும் திருக்குறள் எட்டுத்தோகை பத்துப்பாட்டு
கொள்ளையிடும் நாலடியார் பொக்கிசப் புதையல்
அள்ளி அணையுங்கள் தெள்ளிய தெய்வத்தமிழை
இவள் அன்னையே என் தமிழ்த்தாயே
00
மிரண்டிடாதீர்! தோன்றிய பிறப்பு குமரிக்கண்டம்.
முரணற்ற மணிமகுடம் சங்க இலக்கியங்கள்
திரண்ட இலக்கிய மரபுத் தேனாறு
இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுக்கும் மேலானது
புரண்டு நீந்துங்கள் முவேந்தரும் தாலாட்டினர்
அரங்கேற்றுங்கள் கவலைகள் உங்களைத் தின்றிடாது!
00
கனல்கவி வேதா. இலங்காதிலகம் - தென்மார்க் - 4-3-2025














            

1 கருத்து:

  1. Sandradevi Thirunavukkarasu
    வாழ்த்துக்கள்
    10-3-25
    Vetha Langathilakam
    முத்து நகர் முத்து குமார்
    Author
    Admin
    +1
    Vetha Langathilakam
    மிக மிக சிறப்பான சீர்மிகு சீர்கள் தொடர்ச்சியாக நடக்கும் இந்த தெள்ளுதமிழ் தென்னவனின் வரிகள் என்பது ஐயா கவி சித்தர் தென்னவன் ஐயாவை மையமாகக் கொண்டு தொடங்கப்பட்டது.
    ஐயா நம் தமிழ் அன்னைக்கு வாழ்த்து போற்றிகள் எழுதியிருக்கின்றார் அத்துனை சிறப்பு மிக்கவர். தொடர்ந்து பயணியுங்கள்.
    நான்கு நான்கு சீர்களாக அடிகளை பிரித்து எழுத ஆய்வு செய்ய ஏற்றதாக இருக்கும்.
    7-3-2025

    Vetha Langathilakam
    Kennedy Kennedy
    All-star contributor
    அருமைங்க நம் தாய் மொழி தமிழ் வளர்க
    10-3-2025
    Vetha Langathilakam
    Author
    Kennedy Kennedy Nanry Urave!
    10-3-25

    பதிலளிநீக்கு

494 (1036) கவியரங்கம் எனது 10வது

             நிலாமுற்றம் தொடர் நிகழ்வாகக் கவியரங்கம் நடந்ததில் சிலவற்றில் நான் கலந்து கொண்டேன். வேதாவின் வலை ஒன்றில் கவியரங்கம் நிகழ்வில் 6...