ஞாயிறு, 11 மே, 2025

471 -(1014) கவிதைப் பள்ளு -2

 


                 



   


 





கவிதைப் பள்ளு -2


கவிதைப் பரிசுப் பொதியை விரித்து

அவிதலாகாது (அணைதல்) கவினுறு மொழிக் குருத்துகளை

கவிழாது ரசிக்கிறது சீர்தமிழாக மனம்.

குவியும் தேன்துளிகள் அலட்சியக் கிண்ணங்களை

தவிர்த்து  நற்கருத்துகளைத் தரிசித்து இன்புறுகிறது.

00

காற்றின் மீதொரு நடனமாக மொழி

ஏற்றம் இழிவுற்றது உயர்வுடைத்து.

சற்றுமே ஓயாது சகலதும் வாசித்து

பற்றுடன் தமிழைப் பற்றுதல் இன்பம்.

வற்றாத சீவநதி தான் தமிழ்.

00

மழைத்துளி உயிர்க் குருத்தைச் சிலுப்பி

அளையும் குளிர் போன்றது தமிழ்

இழையும் இதம் தலைகோதும் இன்பமானது.

இரவில் ஊர்வலமாகும் நட்சத்திர ஓடை போல

தரவாய்ப் பெருகும்  அனுபவ ஓடைகள்.

00

கவிதையில் வரையும் உருவங்களை எழுதி

பூவிதையாகக் காற்றில் கடலில் உலகில்

பவித்திரமாக விதைத்து மரத்தின் இலைகளாக

குவிகிறது கருத்துக் கனிகள். இனிமைக் 

கவிதையில் இன்பம் ஆனந்த ஓடையாகிறது.

00

இன்று நேயர்களுக்கு நல்ல மனமா!

வென்று மலையாகிறது கருத்துப் பொதிகள்.

அன்பின் ஆதரவில் தான் உயிர்த்தல்

என்றும் அலட்சியம் அங்கீகாரமின்மையில்

தன் நம்பிக்கை தூளாகிச் சிதறுவது உறுதி.


கவிச் சிற்பி - வேதா. இலங்காதிலகம். தென்மார்க்  11-5-2025


        







3 கருத்துகள்:

  1. Sujatha Anton
    காற்றின் மீதொரு நடனமாக மொழி
    ஏற்றம் இழிவுற்றது உயர்வுடைத்து.
    சற்றுமே ஓயாது சகலதும் வாசித்து
    பற்றுடன் தமிழைப் பற்றுதல் இன்பம்.
    வற்றாத சீவநதி தான் தமிழ்.
    13-5-2025
    Sujatha Anton
    அழகு தமிழ் அழகு வாழ்த்துக்கள் "கவிதாயினி வேதா!"

    பதிலளிநீக்கு
  2. Ponnambalam Ramanathan
    11-5-25 photo wish
    Vetha Langathilakam
    Ponnambalam Ramanathan samme to your wife -- Thank you.

    Sandradevi Thirunavukkarasu
    Nice
    12-5-25
    Vetha Langathilakam
    M.A. Ramamoorthy
    அருமை.... வாழ்த்துகள்.
    2m
    Reply
    Vetha Langathilakam
    M.A. Ramamoorthy mikka nanry
    13-5-2025

    பதிலளிநீக்கு
  3. Bala Kumar
    ஊக்கமது கைவிடேல் /
    நன்றாகப் பேசு சிகரம்தொடு /
    சிங்கப்பெண்னே /
    15-5-2025
    Vetha Langathilakam
    mikka nanry

    பதிலளிநீக்கு

494 (1036) கவியரங்கம் எனது 10வது

             நிலாமுற்றம் தொடர் நிகழ்வாகக் கவியரங்கம் நடந்ததில் சிலவற்றில் நான் கலந்து கொண்டேன். வேதாவின் வலை ஒன்றில் கவியரங்கம் நிகழ்வில் 6...