நிசங்கள்!
நிலையற்ற வாழ்வில் நிசங்களைத் தேடல்
விலையற்ற வேலை முயற்சியின் பாடல்.
வலை பிரித்து இடர் அழித்து ஓடல்.
தலையுடையும் மலை மீது மோதல்.
நிலையூன்ற ஒரு நேர் வழியோ
தொலையாத தமிழ் வழியோ கொள்ளல்
இலையூடு மறைந்த காய் தேடும்
அலை போன்ற அயராத ஆடல்.
கலையால் களிப்பு உலகில் காத்திரம்.
சிலை சித்திரம் ஓவியம் நிசம்.
மலை மந்த மாருதம் இன்பம்.
விலையற்ற நர்த்தனம கீர்த்தனம் நிசம்.
கறை அழித்து குறை தீர்க்கும்.
இறை நேசம் இன்பம் தரும்.
நிறை அன்பு எனும் பரமானந்தம்
சிறையுடைத்து வேதனைக் கதவுடைக்கும் நிசம்.
இணைய வலைப்பூ நிச்சயமோ இல்லையோ
அணைக்கும் அச்சடித்த தாள்கள் நிசம்.
அரசாங்கமும் தமிழரும் தினம் அடிபடுதல்
வரமிகு எழுதுகோலின் சத்தியப் போரும் நிசம்.
வாழ்ந்து மடியும் சாதாரண மனிதனிலும்
வாகை சூடி சாதிக்கும் சாதனை நிசம்.
வான் நிலம் கடல் கதிரவன்
வாடாத தமிழ் வாசனையும் நிசம்.
திலகம் வைப்பதாய்ச் செய்யும் செயல்கள்
நலமாய் அமைதலே நிலத்திலூன்றும் செயல்.
கம்பன் இலக்கியத்தில் கொடியேற்றினான்.
கருணையற்ற கிட்லர் இம்சையில் நிலைத்தான்.
காந்தி அகிம்சைப் போரில் நிசமானார்.
கவிதையில் பாரதி நிலைக்கிறார் நிசம்.
பைந்தமிழ் பாவலர்- வேதா. இலங்காதிலகம் - தென்மார்க் -9-2006
M.A. Ramamoorthy
பதிலளிநீக்குஅருமை.."திலகம் வைப்பதாய்ச் செய்யும் செயல்கள்
நலமாய் அமைதலே நிலத்திலூன்றும் செயல்."
27-5-25
Vetha Langathilakam
oommm nanry bro 27-5-2025