நாசகார மது
நவீன உலகிது நாம்
நவதிறமைகள் கொண்டு
நலமான வாழ்வும் வாழலாம்
நாகரீக வாழ்வு வாழலாம்
நாகம் தீண்டுவது போல
நாசகார மதுவை அணைத்து
நாலுபேர் எம்மைக் கண்டு
நாணுகின்ற வழ்வு எதற்கு!
அறிவும் ஆற்றலும் உண்டானால்
அருமையாய் விற்பன்னர் உதவிடுவார்
அழைத்துச் செல்லலாம் பாதிப்பாளரை
அடம் பிடித்து மறுத்தால்
அது அவரின் தலைவிதி
இதுவே புத்தியுள்ளோர் செயல்
இகழ்ச்சிக்கு இடம் கொடேல்
இந்திரபோக வாழ்வு இங்குதான்! இங்குதான்!.
Subi Narendran
பதிலளிநீக்குநாசகார மது என்பதை அறிந்தால் இந்திரபோக வாழ்வுதான். வாழ்த்துக்கள்.
2019
Vetha Langathilakam
ஆழ்ந்த அன்புடன் மகிழ்ச்சி சகோதரி Subi Narendran