யார் குற்றம்!
பூக்களின் தோரணம், பூவிரித்த பஞ்சணை
பாக்கள், பால் செம்புக் கலவியல்ல
முறிந்த கரும்பு வில்லின் கணையால்
அறிவு தொலைத்து அருவருத்த காமம்.
தொப்புள் கொடியறுத்து ஏற்க மனமனமற்ற
பாதுகாப்புச் செய்யாத புணர்தல் கொடுமை.
காமச் சூறாவளியில் சிக்கிப் பிடுங்கிப்
போட்ட கனவுகளற்ற சுந்தரப் பூச்செண்டு.
பிச்சை எடுப்போரும் கந்தலில் சுற்றி
பச்சை மண்ணைப் பேணி வளர்ப்பார்.
உடலிச்சை தீர்த்த விடையறியா நிலை
கொச்சைக் காமம் புரிந்தவர் குற்றம்!
கருத்தடையற்ற உடற்பசிக் குற்றம் இது!
கருவின் வாழ்வின் வண்ணங்கள் முகிழ்த்திட
விரும்பாத இருவர் காக்காத சிசு
தெருவோரக் குப்பைத் தொட்டியில் சமர்ப்பணம்.
எதற்காக ஆடையணிந்து மானம் மறைக்கிறார்!
எதற்காக பிடுங்கிக் குப்பையோடு வீசுகிறார்!
பண்பு தவறி நெறி தவறுமுலகோர்,
சுயநல ஊனமனங்கள்! என்று திருந்துவார்!
வெற்று வயிறாய் கருக்கட்டாதேங்கும் நிலையில்
எற்றும் புயல் மனதோடுலகில் பலர்!
பொற்பத தென்றலும் பூக்களும் அணையாது
அற்புதக் குழந்தைப் பாக்கியமிங்கு நரகத்தில்.
வாழ்வின் தோல்வியிங்கு இரத்தமும் சதையுமாய்
தாழ்வினும் கீழாய் இழிவு நிலையில்
கைதவறிய இந்நிலையுயிர் பிரியும் வரை
குற்றவாளிகள் மனதறுக்காதோ! தப்புவரோ மனச்சாட்சிக்கு!
தேசிய காமக் குற்றம் உலகெங்கும்!
மனித இலட்சணம், மனித நேயமுள்ளவன்
பாதையடைத்த காமப் பயணம் செல்லான்!
முறையான உறவால் பெண்மையை கொளரவிப்பான்!
2-8-2016
Premkumar Prajana :- சூப்பர் மா
பதிலளிநீக்கு·26-7-2016-
Vetha Langathilakam :- மிக நன்றி சகோதரா. மகிழ்ச்சி..
26-7-16
Poongavanam Ravendran :- அருமை வரிகள் வாழ்த்துக்கள்
25-7-16
Vetha Langathilakam:- Poongavanam Ravendran மிக நன்றி மகிழ்ச்சி..26-7-16
பூவின் ரசிகன் :- அருமை..
27-7-2016
Vetha Langathilakam :- மிக்க நன்றியுடன் மகிழ்வும் சகோதரா-
27-7-16
Ratha Mariyaratnam :- மிக அருமை சகோதரி
27-7-16
Vetha Langathilakam :- மிக்க நன்றியுடன் மகிழ்வும் Ratha.
அருமை சகோதரியாரே
பதிலளிநீக்கு