வியாழன், 25 ஏப்ரல், 2019

72. (653). சிரியுங்கள்!







 சிரியுங்கள்! 

  சிரியுங்கள்! சுய கவலையைச் சிரிப்பால்
 பிரித்துத் தூர வீசுகிறீர்கள் நீங்கள்.
 சிரிப்பு மனிதனுடன் கூடப் பிறந்தது.
 சிரிப்பால் மனித முகத்துக் கவலைகளும்
 உரித்தான நெஞ்சுத் தசைகளும் வலிமையாகிறது.
 சிரிப்பால் முந்நூறு தசைகள் அசைகிறது.
 அரிய நோயெதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது.
 துரித இரத்த ஒட்டம் உருவாகிறது.

சிரிப்பெனும் உணர்வு வெளிப்பட்டால் இனிதாகத்
 தரிக்கிறது உடலில் வேதியல் மாற்றம்.
 கரிசனமாய் உடல் மனம் வலிமையாகிறது.
 அரிக்கும் மலையாம் பிரச்சனைகள் பனியாகிறது.
 சிரிப்பில் பல! சாகசச் சிரிப்புஇ
 சங்கீதச் சிரிப்புஇ நையாண்டிச் சிரிப்புஇ
 அசட்டுச் சிரிப்புஇ ஆணவச் சிரிப்புஇ 
 ஏளனச் சிரிப்பு புன்சிரிப்பு

சனங்கள் மட்டுமன்று சில மிருகங்களும்
 மனமார அருத்தம் புரியாது சிரிக்கும்.
 பொருந்தாத சிரிப்பை பெரும் மனநோயும்
 பொருட்படுத்தாத சிரிப்பைப் போதைப் பொருளுமருளும்.
 கனம் தரும் முரண்பாட்டுச் சிரிப்பு
 தனமாகும் வரவேற்பறை ஊழியர் சிரிப்பென்று
 இனம் காட்டுவது விந்தை அல்ல.
 வனமான வாழ்வை நந்தவனமாக்கச் சிரியுங்கள்!

 28-5-2016  



1 கருத்து:

494 (1036) கவியரங்கம் எனது 10வது

             நிலாமுற்றம் தொடர் நிகழ்வாகக் கவியரங்கம் நடந்ததில் சிலவற்றில் நான் கலந்து கொண்டேன். வேதாவின் வலை ஒன்றில் கவியரங்கம் நிகழ்வில் 6...