புதன், 10 ஏப்ரல், 2019

64. (646) குளம்பாதிரு மனமே!







குளம்பாதிரு மனமே!


தினங்கள் ஒரு திருமிகும் வரவாக
கனமின்றி ஏற்காது கலங்கும் நீராக
இனமெனும் குளப்பக் கறையான்கள் குமைந்து
அனந்தமாய்க் குறளியிட குளம்பும் மனங்களே!

கீறலிடும் இசைத் தட்டாக, கிடுகிடுத்து
கீழாகும் பந்தல் கொடிக்காலாக விசனமாகிக்
குளம்பும் மனங்களே! வீசும் காற்றில்
விளக்கமின்றி ஆடும் சுடராகும் மனங்களே

பூமி  கடல் மரங்கள் மாறவில்லை
பூக்கள்  காடுகள் களனிகள் மாறவில்லை
பூமியின் கவசமாகிக்  கருமங்கள் ஓயவில்லை
ஆறறிவாளன் மட்டுமேன் அமைதியழிகிறான் இலையுதிர்காலமாக!

26-6-2001



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

423 (962) ஊடகம் -- தடம் தீட்டு