திங்கள், 1 ஏப்ரல், 2019

62. (644) .புரியாத எழுத்துகள் சிகரமேற….





புரியாத எழுத்துகள் சிகரமேற….

ஏக்கக் கோடுகள் தாக்கமாய் உருள
ஆக்கத்தின் அலட்சியம் ஆசாட பூதியாகிட
ஊக்கமாய் வரிகள் மேலும் சிறகுகளாய்
விரிக்க எழுத்து ஏகமாய் உயருகிறது…
பிரிக்க முடியாது முடிவற்று நீளும்
சிரிக்கும் சீராய் சமர்த்தாக நீளும்.

விடமாட்டேன்! திறந்த வானமாய் பரவும்!
அடர் எழுத்துக்கள் உன்னை மூடும்!
தொடர்! புரியாத எழுத்துகள் சிகரமேற!
படர்! மத்தாப்பு வானமாக சுடர்!
இடர் விலகவும் மனம் மகிழவும்
உடர் (உடல்) திடமாகிடவும் எழுது! எழுது!

புரியாத எழுத்துகள் சிகரமேறும் விசித்திரம்
சரியாது ஒப்பனையாய் எழுதும் கவிதை
விரியும் புதுக் கவிதையென்பது புரியாததோ!
வரிவரியாகவும் வலம் இடமாகவும் முழுவதும்
வாசித்தும் புரியாதது புதுக் கவிதையோ!
நேசிக்கும் கவிதை நிலை இதுவோ!

12-11-2017





1 கருத்து:

494 (1036) கவியரங்கம் எனது 10வது

             நிலாமுற்றம் தொடர் நிகழ்வாகக் கவியரங்கம் நடந்ததில் சிலவற்றில் நான் கலந்து கொண்டேன். வேதாவின் வலை ஒன்றில் கவியரங்கம் நிகழ்வில் 6...