வீழ்வோமென்று நினைத்தாயோ !
அறிவு தேடல் அவசியமென்று உணராது
குறியின்றி அவலமாய்க் குற்றங்கள் செய்து
அறிவற்ற கதைகள் அளவின்றிப் பேசி
கறியுணவு தேடிக் கணக்கின்றித் தின்று
குறிக்கோளின்றிப் பலரை அழிக்கும் செயலைச்
சிறியராகச் செய்து சீரின்றி வீழ்ந்திடோம்.
நரை கூடி முதுமை வரை
வரையின்றி நற்செயல்கள் வளர்த்து வாழ்தல்
தரையில் நாம் தரித்திடும் உயர்
வரையறை வாழ்வென வகுத்தால் விளைவினிது.
திரைமூடும் காட்சியாம் திடமற்ற பிறவியை
விரைவாக்கி உயராது வீழ்வோமென்று நினைத்தாயோ!
விளையாட்டு மனிதராய் வீழ்வோமென்று நினைக்காதே
விளைவுகள் பயனாக வினைத்தூய்மை பெருக்கி
விளைச்சல் உச்சமாய் வன்முறை அழித்து
விளைவு போராட்டமாயினும் வாழ்வை இனித்திட
விளை நீர்ப்பெருக்கி வினையை வெற்றியாக்க
சளைக்காது உயர்வோம் சாய்ந்திடோம் அறிவாய்!
25-5-2018
AnuKavi RifkhAn :- வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குVetha Langathilakam :- மகிழ்ச்சி நன்றி urave....
Rathy Mohan
பதிலளிநீக்குவரிகள் முத்து முத்தாக அழகாக இருக்கின்றன
2018
Vetha Langathilakam
Dear Rathy!
photo thanks.
Vetha Langathilakam
Maniyin Paakkal:- அருமை. சொற்கோர்கோர்வை மிகச்சிறப்பு
30-5-2018
Vetha Langathilakam
மிக அன்பும் மகிழ்வும் உறவே
Sujatha Anton
பதிலளிநீக்குஅழகு தமிழ் அருமை. வாழ்க தமிழ்.!!!
·2019