காயா பழமா
கன்று மனதில் ஊன்றிக் கலகலத்த
அன்றைய குழந்தை விளையாட்டு இது.
வென்றால் பழமும் தோற்றால் காயுமென
நன்றாகப் பல நிலையில் பாவித்தோமிதை.
தலையா வாலா, ஒற்றையா இரட்டையா போன்று
காயா பழமாவும் சொக்கட்டான் ஆடியது.
லலி உன்னொடு கோபமாம் நேசமாக
காயா பழமா கேட்போமா நடுவரின் கேள்வியிது.
ஆழ நோவின்றி அன்றைய வயதில்
ஆடிய போர் சமரசம் இன்று குழந்தைகள்
அறிவாரோ வெளிநாட்டில்! பழமென்றால் இனிக்கும்
விளையாட்டில் வெற்றியும் பழம் தானே என்றும்!
11-7-2016
I send this poem to cidny Uthayasoorien malar
பதிலளிநீக்கு