திங்கள், 17 ஜூன், 2019

110 (689) நினைவில் நின்ற பயணம். .








நினைவில் நின்ற பயணம்.

வயது பதினைந்து பதினொராம் வகுப்பு
பாடசாலைச் சுற்றுலா இலங்கை முக்கிய
இடங்களை மல்லிகா வானில் அருமையாக
முப்பது இலங்கை ரூபாவில் சுற்றினோம்.- 1960

சிட்டுக்குருவிகளாகப் பெண்கள் கூட்டம்
பட்டாம் பூச்சியாகச் சிறகடித்தோம்.
விட்டு உயிர் பிரியும் வரை
கட்டிக்கரும்பாய் இனிக்கும் பயணம்.

கண்டிப் பேராதனைப் பூங்கா, நுவரெலியா
கக்கல  பூந்தோட்டம், சிகிரியா மலை,
தம்புல கற்கோயில் பெரும் பாக்கியமே.
பயணம் புது சக்தி தரும்.

நயனம் நிறைய மாறு காட்சிகள்.
வயணமான (விதமான) பல புரிதல்கள்.
சுகமான பல அனுபவங்கள்.
சுயமாய் எம்மைப் புதுப்பிக்கும்.

16-6-2016


சுற்றுலா

சுற்றுலா நோய் திர்க்கும் நல்லுலா..
.மனதும் உடலும் இயற்கையோடுலாவல் சுற்றுலா!
நல்ல சக்தி மனிதமூளை வேரைப் பலப்படுத்தும்
இவைகளைப் பார்க்கும் போது கவிதை பீறிடுகிறது...
சுந்தரனென் துணைவருடன் சுகமாயுலாவப் பேராசை.

2016






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

423 (962) ஊடகம் -- தடம் தீட்டு