வெள்ளி, 14 ஜூன், 2019

108.. (689) ( uudakam -kolusu ) தாழிடாக் கவிச் சுவடு.






தாழிடாக் கவிச் சுவடு.

(தாலவட்டம் - விசிறி)

தாழிடாத கருத்துகள் கவிதைகளாக வேண்டும்.
தாக்கம் தரும் போட்டிகள் தகுதியற்றவர்களால்
தாபிக்கப்பட்டு நடுநிலைமை சரிவது பரிதாபம்.
தாக சாந்தி தீராது  தரக்குறைவினால்.

அகரம் நுகர்ந்து மெல்ல மெல்ல
நகரும் உயிர்மெய்யின் உலா எனும்
சிகரப் பாதை வழியோடி நுண்மையாய்
முகரும், உருகும் இது தமிழ்த்தேன்.

தாழ்வாரத்தில் ஒதுங்காத தூவானமாகத் தலைகோதி
தாராள மயில் தோகையாய் விரிந்த
தாரகை நினைவுகள் நெஞ்சில் ஒளியேற்றி
தாலவட்டமாய்த் திறமை அழகு காட்டும்.

விசனமற்ற வித்தகமிகு வியக்கும் குமிழ்
வியன் தமிழாம் நல் விவசாயம்
பசப்பில்லா நாட்களின் உயர் ஒளியில்
வசமாக்கும் வசியத்தின் திறமை மயக்கம்.

சிற்பியின் மாய உளிப் பொலிவில்
அற்புத உரு ஆனந்த விழியில்
கற்பாறையல்ல பவளப்படுகை நேசத் தமிழ்.
உற்பத்தி முத்தப்பொளிவு  கவிதைச் சுவடு .


ஆவணி-2018.






Thank you for KOLUSU




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

423 (962) ஊடகம் -- தடம் தீட்டு