புதன், 7 ஆகஸ்ட், 2019

157 . (730) சுதந்திரம்.






சுதந்திரம்.

அடடா! எத்தனையோ பாடுபட்டே
பத்தரைமாற்றுச் சுதந்திரம் கிடைத்தது!
சுதந்திரம் கிடைத்தென்ன! இங்கது 
இதந்தரும் நிலையிலின்றியொரு
தந்திரமாகவன்றோ செயலாகிறது.
மக்களெல்லோரும் சமமென்பதுறுதியில்லையே!

பறவைகளின் பறப்பும், மலர்களின் 
மலர்வும், பட்டுப் பூச்சிகளுக்குமுள்ள
சுதந்திரம் மனிதனுக்கு அறுந்ததாகவேயுள்ளது.
வல்லரசென்ற முத்திரையும் சொந்த
சுதந்திரக் கொடியும் தவிர, ஆங்கிலம் 
பேசியே ஆனந்த சுதந்திரம் அனுபவிக்கிறார்கள்.

குடியரசு வல்லரசானாலும்
குடிப்பதற்கு நீரில்லை. வெள்ளை 
முதலைகள் போக கறுப்பு முதலைகள்
பெருகியேழைகளின் இரத்தமுறிஞ்சி
சுகபோகமனுபவிக்கின்றன.....

14-18-2016


வேறு 

கிடைக்காத சுதந்திரம்.

கிடைத்த சுதந்திரத்தைச் சுயநலம் 
படைக்கவில்லை. 
நகரபாதுகாவலர் நிலையம், வங்கியில்
இலஞ்சம் கொடுத்தாலெண்ணம்
நிறைவேறும் நிலை, பெண்கள் 
கற்புடன் திரும்பிவரும் உறுதியற்ற நிலை

நேர்முகப் பரீட்சை, கல்லூரியில் 
இடம் பெறக் காவு கொடுக்க
வேண்டியவை அதிகம்! காலாற
தெருவில் நடப்பதே கேள்வியான
வாகன சாரத்தியங்கள். 
பொறுப்பற்ற நிலைமை

நீதி நேர்மை கடை வீதியிலும்
விற்பனையில் இல்லை. பல
மனிதருக்கு இது என்னவென்ற
விளக்கமும் கேள்விக் குறியே


14-8-16


சுதந்திரம்

சுழலும் உலகில் ஆனந்தமாய்
சுதந்திரச் சிறகு விரித்துச்
சுடரொளியாய் பரவுதல் இனிமை.
சுருங்கி நத்தை ஓட்டினுள்
சுகமென்று வாழ்தல் சிலருக்கு
சுண்டெலியாகப் புதுங்குதலும் சுகமே

2021



2 கருத்துகள்:

423 (962) ஊடகம் -- தடம் தீட்டு