சனி, 10 ஆகஸ்ட், 2019

163. . (736) இயற்கையாய் விடுங்கள்..







இயற்கையாய் விடுங்கள்.. 

இதயங்கள் விசாலமாய் இணைய
பரந்த சிந்தனை புகுதல்
சுயநல வறுமையை அழிக்கும்.

விரல்களைந்தின் இயல்பை மனிதன்
தரமாய் ஏற்கிறான். மானிட
வித்தியாச இயல்பை ஏற்றிடான்.

விடுங்கள்! விசாலமான வானில்
விகசித்துப் பறக்கட்டும் பறவை.
பறக்காதே நடவெனப் பகர்வாரில்லை.

கண்கவரும் சின்னஞ் சிறு
மின்மினிப் பூச்சி ஒளியை
கண் கூசுதென நிறுத்துவாரில்லை.

அன்னம் பாலைப் பிரித்தருந்துமாம்.
பிரிக்காது  சேர்த்து அருந்தென 
உலகில் யாரும் கேட்பாரில்லை.

மயிலின் தோகை நீளமும்
குயிலின் குரலினிமை யியல்பும்
ஓயிலான இயற்கை வரங்கள்.

புவியின் பல்லின வகையான
கவிஞன் வீரிய  கவிச்சிறகும்
கருத்தாய் விளங்கும் வகையிது.

இயல்பை இயல்பாயேற்காது மனிதனை
இயக்கி அடக்குதலில் சர்வாதிகாரியாய்
அஞ்ஞானத்தில் குளிப்பார் சிலர்

10-2-2017





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

423 (962) ஊடகம் -- தடம் தீட்டு