வெள்ளி, 9 ஆகஸ்ட், 2019

160. (733 ) விமானத்தில்.....(உண்மைச் சம்பவம்)







விமானத்தில்.....(உண்மைச் சம்பவம்) 

ஐந்து பிள்ளைகளுடனொரு தாயெம்முடன் இலங்கையிலிருந்து 
பயணமானார். அவருக்கு உதவிட முனைந்து ஆளுக்கொரு 
பிள்ளையைத் தூக்கியபடி விமானத்திலிருந்து பேருந்தேறி  
யெர்மனியத் தலைநகர் விமான நிலையத்துள் புகுந்தோம்.

பிள்ளைகளில் கவனம் செலுத்தியென் கைப்பையை
விமானத்தினுள் விட்டதை அறிந்தேன் எனதும் எனதிரு 
பிள்ளைகளினதும் கடவுச்சீட்டுகள் கைப்பையுள். பிள்ளைகளிடம் 
யாரழைத்தாலும் போகாது இங்கேயே நில்லுங்களென்றேன். 

உடனே ஓடி அதிகாரிகளுடன் பேசினேன்.
'' மிகவும் வேடிக்கை'' என்று கூறியொருவர் பேருந்தில்
சென்று கைப்பையை எடுத்து வந்து தந்தார்.
நல்ல மனிதர்கள் மிகவும் கண்ணியமாயுதவினர்.


காத்திருந்த பிள்ளைகளுடன் அவசர அவசரமாக
டென்மார்க் தலைநகரம் கொப்பென்கெகனுக்குச் செல்லும்
விமானத்தில் ஏறினோம். கணவரோடு (தந்தையோடு) இணைய.
இன்று நினைத்தாலும் சிரிப்பும் திகைப்பும்.

கடவுச்சீட்டின்றி பிராங்பேட் விமான நிலையத்தில்
கைது – நிலக்கீழ் மறியல் _ உயிரினும் மேலான 
பிள்ளைகள் ஒரு கணத்திலன்று  திடுக்கிட்டேன்.
நிலைமைக்கேற்ற நடவடிக்கையென் பெற்றோருக்கு நன்றி.

26-8-16.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

423 (962) ஊடகம் -- தடம் தீட்டு