வெள்ளி, 9 ஆகஸ்ட், 2019

161 (734) என்னுள் கேட்கும் சுகராகமே.





என்னுள் கேட்கும் சுகராகமே.

(தன்மயம்-இயற்கை, திறமை.  பெற்றி-பேறு, இயல்பு)

தன்னுள் தளிர்க்கும் தன்மயமாம்  உணர்வுகள் 
உன்னுள்  என்னுள் உருவாக்கும் சுகராகங்கள்
தன்னூக்கம் நெம்பி பின்னலாகும் வாழ்விலே
மன்னுயிரின் நிலைத்த மந்திரமே நீள்விலே.

அன்னையின் ஆசைமொழிகள் அனுதினம்  மனிதருள்
உன்னும் இன்பத்துளிகள் உயிர்மூச்சாய்  இணைவது.
அன்னணம்  தந்தையுரையும்   அளவற்ற  ஆக்கமீயும்.
இன்னமுத உறவுகளாலும் இசையும்  ஏகாந்தராகங்கள்.

மனிதன் அணையும் மழலை யிராகம் 
புனித பெற்றி பூக்குமின்பத்  தாகம்.
இனிதாம் இல்லறம் இணைக்கும் இராகம்
இரசவாதம் செய்யும் இயல்புடைய நேசம்.

இத்தனை சுகராகங்கள்  இருந்தும் அணங்காம்
சொத்தான தமிழாளே!  பிச்சியானேன் உன்னிலே
உத்தமக்  காதலால் உயிரை  மீட்டுகிறாய்
வித்தகத் தமிழே வியக்கிறேன்  உன்னுறவால்.

இதயவீணையில் நீ இன்னமுத நரம்பாகி
உதய தாரகையாய்  உலாவுகிறாய் வரம்பின்றி.
புதிய  பூவாய்  பொழுதிற்கும்  உறவாடி
பதியமிடுவது பதமான பன்னூறு சுகராகங்கள்.


7.5-2018





1 கருத்து:


  1. Maniyin PaakkalManiyin :- மீயழகிய ராகம்
    12-5-2018

    Vetha Langathilakam
    Mikka makilchy...Mani...
    2018

    Chandra Kala :- Enga irunthu ppa intha words ellam varuthu
    12-5-2018

    Vetha Langathilakam
    இரசனைக்கு மிக மகிழ்வு
    2018


    Maniyin PaakkalManiyin :- வரிகள் என்னுடையதல்ல. வேதாம்மாவுடையது சந்திரா. நான் கருத்து மட்டுமே சொன்னேன்
    17-5-18
    ·
    Chandra Kala:- Oh ...... Awesome words amma
    17-5- 2018

    RRsel Vam:- arumai
    17-5-2018
    Vetha Langathilakam :- Mikka nanry bro
    2018

    பதிலளிநீக்கு

423 (962) ஊடகம் -- தடம் தீட்டு