சனி, 10 ஆகஸ்ட், 2019

164. (737 ) உணர்வால் ஒன்றுபடுவோம்.







உணர்வால் ஒன்றுபடுவோம்.

வீழ்ந்திட்டாலும் நாம்,  வாழ்வது தமிழாகட்டும்
ஆழ்ந்த சிந்தனையிது ஆழ ஊன்றுவோம்.
வாழ்ந்திடுவோம் நல் வாக்குகளை மனதிலூன்றி.
தாழ்த்திடும் அழுக்காறைத் தகர்ப்போம் உயர்வோம்.
ஏழ்மையகற்ற இயன்றவரை ஏதாவது செய்வோம்.

கோடிகளும் மாடிகளும் தேடி அழிவதிலும்
வாடியவருக்குக் கைகொடுத்து வாழ  வைப்போம்.
வேடிக்கையின்றி  நல்லுணர்வால்  விடிவு காண்போம்.
கூடித் தமிழனெனும் தனித்துவம் நிலைநிறுத்துவோம்.
ஊடிடாது  தமிழால் உன்னத மனிதமெழுப்புவோம்.

28-5-2018









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

494 (1036) கவியரங்கம் எனது 10வது

             நிலாமுற்றம் தொடர் நிகழ்வாகக் கவியரங்கம் நடந்ததில் சிலவற்றில் நான் கலந்து கொண்டேன். வேதாவின் வலை ஒன்றில் கவியரங்கம் நிகழ்வில் 6...