வியாழன், 8 ஆகஸ்ட், 2019

158 . . ( 731 ) விரகதாபம்.







விரகதாபம்.

விரகதாபம் மேவக் கண்கள் மேய்வது
வராத துணையின் படகிற்கா 
அன்றித்  தாங்காத வெப்பம் 
குளுமை நிலவால் கடற்காற்றில்  
தணியுமாவென்ற ஏக்கமா!...

பார்! கடலை நாயகியாக்கிய
சந்திர முத்தத்தை. அங்கம் 
மின்னக் கடல் நங்கை நெளிகிறாள்! 
நீயும் பொறுத்திரு!  உன் 
நாயகன் வருவான் இன்பமள்ளலாம்!

காற்சிலம்பொலிக்க அன்ன நடையிடும்
அழகுத் தேவதையே உன்
மின்னலிடையும் கன்னக் கதுப்பும்
அன்னத் துகிலுமழகிய கூந்தலும்
நிலவொளியில் மயக்குதே! காத்திருப்பாய்

13-8-2016





1 கருத்து:

494 (1036) கவியரங்கம் எனது 10வது

             நிலாமுற்றம் தொடர் நிகழ்வாகக் கவியரங்கம் நடந்ததில் சிலவற்றில் நான் கலந்து கொண்டேன். வேதாவின் வலை ஒன்றில் கவியரங்கம் நிகழ்வில் 6...