செவ்வாய், 8 அக்டோபர், 2019

194. (764 ) நாணயஙகள்.








நாணயங்கள்.

நாணயம் இல்லா வாழ்வு இன்மை (பூச்சியம்)
நாணயத்திற்கு (மனச்சாட்சி) பயந்து வாழ்கிறான் மனிதன்.
நாணயம் (நேர்மை) இன்றேல் நல்வாழ்வு ஏது!
பெறுமானம் தன்னுள் அடக்கிய தனியுரிமை.

ஏமாற்றிட ஏதுவான நாணயமற்ற கீழ்தரம்
ஏமாந்து போகவும் முதற் காரணி.
ஏதுமொரு நாணயம் கொண்டு பிறப்புமில்லை.
எல்லோரும் பேசும் நாணயத்தையெடுத்துப் போவதுமில்லை.

பணயமாகப் பலர் வாழ்வில் விளையாடும்
நாணயம் நாநயம் இல்லாததால் - மேலும்
கண்ணியம் தொலைத்துப் புண்ணியமும் அழிக்கும்
மனிதனின் நாணயம் கெடுக்கும் நாணயம்.

நாணயத்தின் கையில் மனிதன், மானம்
நாணமழித்துக் குணம் பேதலித்து மாற்றுகிறது.
மனிதம் மதிப்பவன் நாணயத்தின் கட்டில்
மேன்மையான நிர்வாகத்தில் நயத்தோடு உயருகிறான்.

பூவா தலையா போட்டுப் பார்க்க
வாகான தலையாரி நிலையேற்கும் நீதிமான்.
நாணயம் இல்லையேல் கோணமும் அசையாது.
நாணயமற்றவன் எந்த வகையிலும் வீணனே!

பொன், வெள்ளி செம்பாலுமானது இது.
மன்பதை மனமும் தரத்தினாலிதே பெறுமதியே!
மன்னர்களின் பரிசாக பொற்காசு ஆனது.
ஆகழ்வாராய்சியில் நல்ல தகவல்கள் தருகிறது

22-5-2017




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

423 (962) ஊடகம் -- தடம் தீட்டு