செவ்வாய், 29 அக்டோபர், 2019

210. (779 ) தத்துவம்








தத்துவம்

அமைதிக் குளத்தின் ஆழ்ந்த தியானம்
சமைந்தது சளக் கென விழுந:த கல்லினால்
சுழன்று சுற்றியது சுழி அலைகள்
தொலைந்தது பளிங்கு நீரின் அழகு
கலைந்தது ஒப்பில்லா அமைதித் தவம்

மதிநுட்ப மனஅரங்க அமைதி
விதியெனக் கலைவதும் மனிதர்களால் தான்
கொதிக்கும் பல நினைவு அலைகள்
மிதிக்கும் மனஅமைதித் தவத்தை

எறும்புச் சுறுசுறுப்பு ஒழியாமல்
குறம்புச் சிறுகதை குறையாமல்
விரிந்த பூ  முகம் வாடாமல்
மலர்ந்த மலர்ச் சிரிப்பு மனக்கட்டும்.
(பந்தபாசம் படத்தின்- கவலைகள் கிடக்கட்டும்- பாடலுக்கு எழுதிய வரிகள்.)

2006




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

494 (1036) கவியரங்கம் எனது 10வது

             நிலாமுற்றம் தொடர் நிகழ்வாகக் கவியரங்கம் நடந்ததில் சிலவற்றில் நான் கலந்து கொண்டேன். வேதாவின் வலை ஒன்றில் கவியரங்கம் நிகழ்வில் 6...