புதன், 9 அக்டோபர், 2019

197 (767 ) கலகம் இல்லா உலகம்.






 கலகம் இல்லா உலகம்.

நடக்கும்  நிகழ்வுகளால்  நாட்டில்  வேதனைகள்
கடக்கும்  நிலை  உருவாகினால் நாம்
தடக்கி  வன்முறையில்  வீழ்வது  குறையும்.
முடங்கியது  மக்களின்  கருணை  மனவளம்!
கிடப்பில்  நற்குணங்கள்  துயில்வது  ஏன்!

அன்பைப்  பிணைத்து,  பண்போடு  பேசி
இன்முகமாய்  ஒருவரோடு  ஒருவர்  நலனில்
இன்னும்  அக்கறையோடு  உறவாடிக்  கலந்தால்
வன்முறையாளரும்  மாறிட வாய்ப்பு  உருவாகும்
நன்மையாம் கலகம்  இல்லா  உலகிதுவே!

தலகம்(தடாகம்)  நிறை  தாமரையான  பூமியில்
கலகமெனும்  குழப்பமான  பகை  உணர்வை
இலகுவாக   நீசர்  மூளைச்சலவையாக்கி  பிணக்கு
உலவச்  செய்கிறார்,  நிலவரம்  பின்னும்  
கலவரமாகி  நல்லவைகள்   விலகுவது  பெருமாபத்து.

சிறுமை பெருமையற்ற  ஒருமை  நிலையோடு
வறியவர்  தனவானற்ற  பறவைத்  தன்மையோடு
வல்லமைத்  தேனீயாய்  உழைத்து  உதவுவதோடு
வளமிகு  அன்பே  மதமாய்ச்  சமரின்றியின்புறுவோம்.
கலகமில்லா  உலகில்  திலகமாய்  பேராற்றலாயுலவுவோம். 

17-5-2017



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

423 (962) ஊடகம் -- தடம் தீட்டு