சனி, 26 அக்டோபர், 2019

208. (777 ) வந்தது வசந்தம்








வந்தது வசந்தம்


நட்சத்திரப் பூக்கள், நன்நீலவானம்
கட்புலம் கவரும் அருவி, நந்தவனம்
கவர்ந்து இழுக்கும்  மழலை விழிகள்
கனவு ஊற்று கலலை காண்கையில்
கலை, வர்ணம், பா புனைதல்,
கணவன், குழந்தைகள், உறவுகளோடு
கலந்து உறவாடும் கலகலப்புப் பொழுதுகளில்
குறையின்றி வசந்தம் வந்தது எனக்குள்.

மாயை இருள் குளிர் அரக்கன் 
நேயமாய்க் குளிர் போர்வை விலக்கலில்,
உழைக்கச் செல்லும் அதிகாலைப் பொழுதில்,
குழையும் இன்னிசை  மெல்லிய இழையலில்,
கிழக்கு  வெளுத்து ஒளியான  பொழுதில்,
கிசுகிசுக்கும் பறவைகள் அதிகாலை மொழியில்,
பாசம் குழந்தைகளால் மதிக்கப் படும் பொழுதில்,
பாடம்   நூல்களால் உணரும் பொழுதில்,

நம் காதல் திருமணமாய் மலர்ந்ததில்
எம் முதற் குழந்தை   ஆணென்ற பொழுதில்
எமக்கென்று பெண் குழந்தை பிறந்ததில்
எதையும் தாமே இன்றவர்கள் சமாளிப்பதில்
எனது பாக்கள் நூலுருவம் ஆனதில்
எனக்குள்ளானது வசந்தம் பல தடவை
சாதக நினைவுகளால் பொங்கும் வசந்தம்
பாதக நினைவுகளால் மங்கும் வசந்தம்.

இப்போது இரண்டு பேரக் குழந்தைகள்
அப்பப்பா பண்ணும் கும்மாளங்கள் குளப்படிகள்

தப்பாது வசந்தம் நாள் முழுவதும்...

17-3-2006
18-4-3004ல் இலண்டன் தமிழ்    வானொலியில் 
வியாழன் கவிதை





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

423 (962) ஊடகம் -- தடம் தீட்டு