செவ்வாய், 15 அக்டோபர், 2019

200. (769 ) சும்மாயிரு.







சும்மாயிரு.

ஏதற்கு இந்த அடக்குதல்!
ஐம்புலன்களை அடக்கி அமுக்குதல்
நல்ல நியாயம் அல்லவே!
இயற்கை உணர்வைக் கட்டினால்
அறிவுக் கும்மி என்னாவது!

வாழ்க்கை நந்தவனத்தில் ஒரு
வட்டத்தினுள் சும்மாயிருக்க முடியமா!
செவ்வகம் சதுரமாகவும் வாழ்வை 
அமைக்கலாமே! காற்று சும்மாவா 
வீசுகிறது! மனிதனுக்குச் சுதந்திரமில்லையா!

ஏக்கப் பள்ளங்கள் நிரவும்
பாசப் பேரொளி விரிந்தது.
பரவசமாய் மனிதனை இயக்கிடும்
நித்திலக் குவியல்கள் நேசம்.
நீந்திடும் மனிதன் தூண்டப்படுகிறான்.

அன்பு முகில்களில் குளிப்பவன்
சும்மாயிருக்க முடியாது! எழுவான்!
இன்பக் கிளர்ச்சி அப்படி!
சாதிப்பான் தனக்கும் சமூகத்திற்குமாய்
தேனீயாகு! தேடல்கள் தொடர்!

காற்றுப் புகும் புல்லாங்குழலாய்
முற்றம் கவரும் இசையிடு!
சும்மாயிரு என்பதை உடை!
இன்பச் சங்கீதம் உருவாக்கு!
மழையில் புல் முளைக்கும்!

இம் மாநிலத்துpல் எம்மை
அம்மா பிரசவித்தாள் நன்றி!
சும்மாயிருக்காது திறமையை விரிப்போம்.
அம்மா அப்பாவிற்கு நற்
பெருமை சேர்த்து வாழ்வோம்.

4-10-2016



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

494 (1036) கவியரங்கம் எனது 10வது

             நிலாமுற்றம் தொடர் நிகழ்வாகக் கவியரங்கம் நடந்ததில் சிலவற்றில் நான் கலந்து கொண்டேன். வேதாவின் வலை ஒன்றில் கவியரங்கம் நிகழ்வில் 6...