ஞாயிறு, 13 அக்டோபர், 2019

199. (பெண்மை - 36) குவலயத்தில் குன்றிலிட்ட தீபமாகு!







குவலயத்தில் குன்றிலிட்ட தீபமாகு!

குத்துவிளக்கேற்று குலவிளக்கே உனக்கிது 
சத்தான ஆரம்பம் வலது கால் வைத்திடு.
குறைகள் குறைத்துக் குதூகலம் பெருக்கி
குடும்பத்தோடு  இணைந்து நிலையினைத் துலக்கு

பெண்ணில்லா  வீட்டின் பொருள் என்ன!
நன்குணர்ந்து பலர் விழித்தால் என்ன!
பூந்தளிர் வாடினால் நீர் ஊற்றுகிறார்
பூவையவள் வாடினால் என்ன செய்கிறார்!

பெண்ணே உன் எண்ணத்தின் திண்மையை
பெண்மையுள் ஏன் புதைத்து மௌனிக்கிறாய்
கண்களைத் திறந்திடு கண்ணே - உலகில்
ஆண்களும் சமயத்தில் உணர்ந்திடட்டும் இதை

உலை ஏற்றி உணவாக்க மட்டுமல்ல
உவகிற்கும் உண்மையாய் உன்னழகுக் கரங்கள்,
உன் அற்புத மூளையும் ஓயாது 
உதவட்டும் எண்ணத்தில் கொள் பெண்ணே!

நந்தவனக்  கிளியாய் அழகு மட்டும் சிந்தாது
நந்தாவிளக்காய் அறிவை  சிகரத்தில் ஏற்று
பிந்தாது நீ திருமகள் தானென்று காட்டு
' பெண்தானே ' எனும் நெஞ்சத்தில் தூசு அகற்று.

10-2-2003
(ரிஆர்ரி வானொலி பெண்கள் நேரத்திற்கு ரதி கோபாலசிங்கத்திற்கு அனுப்பி. 
வெளியானது)




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

423 (962) ஊடகம் -- தடம் தீட்டு