சனி, 2 மார்ச், 2019

39. (625). குறள் . கவிதை (1 -2 -3)









1. 
குறள்- 
உற்ற    காலத்து   உதவிக்கு


உகந்ததாய்   எதுவும்  ஈடாகாது.
தமக்கு உதவுவோர் தன்மையை 
தகவின்றி   மறப்பார்  தக்காரல்லர்.
சிறுதுளி  உதவியும் பெறுமதியுடைத்து
அறுதியாய் மறப்பது உய்வற்றது.
தானமான உதவி வானளவானது
ஏனமற்றது தெய்வத்திற்  கொப்பானவர்
தீனமற்ற  உதவியாளர் ஈனமற்றவர்.

24-7-2018



2.
திருக்குறள் கவிதை-


(குடும்பினி - மனைவி)

வாழ்க்கைத் துணை வாழ்வை உயர்த்தி
தாழ்விலா மதிப்புக் கூட்டும்  உத்தமி.
வருவாய்க்கு ஏற்ற வரவு செலவை
கருவாய் எண்ணுவாள் கண்ணியத் துணைவி.
குடும்ப உறவை, குழந்தையைக் காக்கும்
குடும்பினி   என்பவள் குடை   போன்றவள்.
நியாயமுடன்  யாகமாய்  நினைத்துத் தன்னை
தியாகம் செய்பவள் திருவுடை மனைவி

 3-7-2018


குறள்  


தாய்மைச்    சந்ததித்   தாய்வேர்   என்பது
தாய்மைப்    பேற்றுத்   தவம்  தானே

உலகில்   இறையாய்    உயர்    தெய்வம்
உலவும்   தாயாம்   உணர்வது   கடனே

1-7-2018









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

423 (962) ஊடகம் -- தடம் தீட்டு