புதன், 20 மார்ச், 2019

56. (638). தென்றல் புயலாய் ஆனதேன்!







தென்றல் புயலாய் ஆனதேன்!


இனங்கள் பல இணைந்த டென்மார்க்கில்
இணைவாக்கம் இயங்கும்  மார்க்கத்தில்
இலங்கையர் அமைதி காப்போர்
இலங்கும் கருத்து பலர் ஏற்பார்
சங்கதி பயில நாம் பொதுவில்
சங்கடமற்றவர் பிறர் நோக்கில்.

நாட்டிலும் அகல்விளக்கு நாம்
கூட்டுப் புழுவாய் அமைதி காத்தோம்.
ஓங்கியது அரச அடக்குமுறை
தூங்காத சர்வாதிகார ஆட்சிமுறை
நீங்காது ஓதிய புத்தபிக்கு உரை
பலர் நம்பிக்கை முனைக்கரை.

பொங்கித் தகர்ந்தது இறுதிமுறை
தங்கிடத் தீர்மானி;த்த அடக்குமுறையை
கொன்றிட எம்மவர் தட்டினார் போர்ப்பறை
வென்றிடச் சென்றனர் போர்வரை
இறுதிவரை சுதந்திரம் சிறை.
குருதி ஈரம் போராளி  கல்லறை.

சங்கத் தமிழ்த் தென்றல் சூல்கொண்டது.
கொன்றிடும் புயலாய் மாறியது
அன்றில் பயந்து பறந்தது.
கன்றிலிருந்து கப்பலீறாய்
சுழன்று  புரட்டியடிக்கும் புயலாய்
நின்றவிடம் மாறியது தலைகீழாய்.

குமிண்சிரிப்பும் குலுங்கும் அழுகையும்
கொட்டும் அழுகையும் கொழுத்தும் வெயிலும்
கொள்ளையிடும் தென்றலும் குழப்பும் புயலும்
சகடவாழ்வு சந்திக்கும் ஆரமன்றோ
மகுடமிடும் வாழ்வின் மறைபொருளன்றோ!
விகடம் நிறை வாழ்வின் விசேடங்களன்றோ!

20-1-2003.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

494 (1036) கவியரங்கம் எனது 10வது

             நிலாமுற்றம் தொடர் நிகழ்வாகக் கவியரங்கம் நடந்ததில் சிலவற்றில் நான் கலந்து கொண்டேன். வேதாவின் வலை ஒன்றில் கவியரங்கம் நிகழ்வில் 6...