வெள்ளி, 22 மார்ச், 2019

57. (639) தமிழனின் கலைத்திறனைக் கண்டு








தமிழனின் கலைத்திறனைக் கண்டு தரணியும் வியந்ததே.

விஞ்சுமாயிரமாண்டுத் தமிழர் கலைத்திறன்
நெஞ்சுயரப் பறைசாற்றுமுலகப் பாரம்பரிய சின்னம்.
தஞ்சைப் பிரகதீசுவரர், தஞ்சைப் பெருவுடையார்
தஞ்சாவூரின் வரலாற்றுப் பெருமைச் சிவனாலயம்.
மிஞ்சுமளப்பரிய ஏழாண்டுச் சாதனை. தலைமைச் சிற்பி
குஞ்சரமல்ல ராசராச ராம பெருந்தச்சன்.
சோழராட்சியின் பொற்கால உருவாக்கம்.
ஆயிரத்து நான்கில் கட்டுமானமாரம்பம்.

புவியதிர்வால் பாதிப்பற்ற முறையாகக், கோள்களின்
கதிர்வீச்சு மையத்தில் குவியுமமைப்புடைத்து.
புறநாட்டுப் படையெடுப்பாளர்களாலும் தகர்க்கவியலாத
முழுமையான கருங்கல்லிலுருவாக்கம். கற்பக்கிரகத்தின்
மேலோங்கிய விமானம் நூற்றுத் தொண்ணூறு
அடியுயரத் தனித்துவ மெருகுடையது.
தட்சிண மேருவென்று இராசராசனிதையழைத்தான்.
கட்டிடக்கலையின் கி.பி 1010ன் சவாலிது.

இருபது தொன்னுடையவொரே கல்லினால்
இரண்டாவது பெரிய நந்தியுருவமமைந்தது.
முதலாம் இராசராசசோழன் அருள்மொழிவர்மனின்
பதிலான கனவின் ஆணையிது.
முதிய எகிப்தியக் கோபுரக் கட்டுமான விதியுடையது.
சித்திர, சிற்ப, நடனக்கலையின் பிரதிபலிப்பு.
ஓன்றரை இலட்சம் தமிழ் கல்வெட்டுகளுள்ளதாமிங்கு.
130,000 தொன் கற்களாலுருவாகிய கோயில்.

நுண்ணிய கட்டடிக்கலையினெடுத்துக்காட்டு
இருநூற்றுப்பதினாறு அடியுயரக் கோவில் விமானமன்று
பொன் பூசிய தகடாலானது. 1311ல் 
மாலிக்கபூரின் படையெடுப்பில் சூறையாடப்பட்டது.

15-12-2017   




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

423 (962) ஊடகம் -- தடம் தீட்டு