செவ்வாய், 19 மார்ச், 2019

53 (636) தீப ஒளி தந்திடட்டும்







தீப ஒளி தந்திடட்டும்


புத்தாடை பெறுவாம்
பூவாணம் விடுவோம்
பித்தாகப் பட்டாசு
தித்திக்கும் பட்சணங்கள்
மொத்தமாய் ஏங்கியது.
சிறுவயதுத் தீபாவளியது.

பாரெங்கும் பண்டிகைக் கோலம்
பரவசமான பெருநாள் கோலம்
பண்டிகை நாளானாலும்தொழிலுக்கு
வண்டியில் ஏகும் சங்கடமான 
புலம்பெயத் தீபாவளி நாள்

மத்தாப்பு சொரிந்து சொத்தாகும்
மனதிலொளி மகிழ்வைத் தந்திடட்டும்
நயனங்கள் ஒளிரும் நல்வாழ்த்து
சேரட்டும்! திருவிழாக் காட்டிடும் 
தீபாவளி நல் வாழ்த்துகள்.
உங்களுக்கும் எங்கள் வாழ்த்துகள்!

5-11-2002  (ரிஆர்ரி வானொலியில் சகோதரார் லோகதாஸ் நிகழ்வில் நான் வாசித்த கவிதை)

வேறு

தீப   ஆவளி

தீவினை  அழித்து நன்மை செய்யென்று
தீதறக் காட்டிய வழி தானோ
தீப வரிசை இட்டு மகிழ்வது!

தீஞ்சுவைப் பலகாரம், புத்தாடையோடு
தீங்கனி மழலைகள் ஆனந்திக்க
தீக்கதி தமிழனுக்கு  வரமுதல்
தீர்க்கமாய் ஆனந்தித்தோம். இன்று
தீர்வின் வழியோடு  தீபாவளி ஆகிறது.

நண்பர்கள் உறவுகள் அனைவருக்;கும்
நனி சிறந்த தீபாவளி வாழ்த்துகள்

 26-10-2019
















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

494 (1036) கவியரங்கம் எனது 10வது

             நிலாமுற்றம் தொடர் நிகழ்வாகக் கவியரங்கம் நடந்ததில் சிலவற்றில் நான் கலந்து கொண்டேன். வேதாவின் வலை ஒன்றில் கவியரங்கம் நிகழ்வில் 6...