வெள்ளி, 8 மார்ச், 2019

45. வழிமேல் விழி வைத்து ( பாமாலிகை பெண்மை- 28)







வழிமேல் விழி வைத்து


அளிகள் மொய்க்கும் பூங்காவில்
ஒளிவீசும் கண்களோடு தமிழ்
மொழியால் கவி படைத்து
வழி மேல் விழிவைத்து
களிப்போடு காத்திருப்பாள்
காதலன் வருகைக்காய்.

அன்பு மொழி கேட்க
ஆசை விழி சோர
வழி மேல் விழிவைத்து
வனப்போடு காத்திருப்பாள்இ
வாசலில் பழியாகத் தன்
வாழ்க்கைத் துணைக்காக

பிஞ்சுக் கால்கள் வெயிலில்
பிள்ளை பிந்துகிறானே பள்ளியால்
பாசத்தில் நொந்து காத்திருப்பாள்
வாரிசுகள் குடும்பத்தைத் துளிபாசமிழக்காமல்
வரவேற்கக் காத்திருப்பாள்
வரப்போகும் திருநாளில்

வயதான துணை அவன் 
வலிமையாய் வீடு வர
வழியோடு விழியாக வழிபட்டு
வாழ்வெல்லாம் காத்திருந்து
பிறருக்காய் வாழும் அவள்
பெண்மை தாய்மை.

18-8-2002
ரிஆர்ரி தமிழ் அலை வானொலியில்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

423 (962) ஊடகம் -- தடம் தீட்டு