செவ்வாய், 19 மார்ச், 2019

55 . பெண்மை (பாமாலிகை பெண்மை- 29)









பெண்மை

பெண்மை சிறப்பு!
பெண்மை தெய்வீகம்!
கண்கள் பெண்களென
மண்ணில் வாழும்; 
பெண்மையைப் போற்றி நிதம்
விண்ணதிரக் கவி பாடினேன்.

வண்ணப் பெண்மையின் 
தன்மை  மாறலாமா!
கண் பட்டதோவெனும்
எண்ணத் தோற்றம்.
பெண்மையில் கருமை!
தண்மைப் பெண்மை 
எண்ணத்தில்  வழுக்கலாமா!
என்னவிது அருவருப்பு!

உண்மையெது பொய்யெது!
கண்ணியம் மறந்ததா
பெண் சுயநலம் பெருகியதா!
உண்மை நடமாட்டம் 
பெண்மைக்குப் பெருமையெனும் 
வண்ண வரிகள்

வானில் மறைந்ததா!
என்ன பெண்மையெனும்
எண்ணக் குமிழிகள்
என்னைச் சூழ்ந்து
கண்ணை மூடுகிறது.

28-12-2002

வேறு

மரிப்பதில்லை தாய்மை மனம்.

பத்து மாதம் சுமந்து
பத்திரமாகக் காத்தவளிற்கு இது
அத்தனை பாரமே அல்ல.
சித்தம் இனிக்கக் காலமும்
பத்திரமாய்  மனதில் காப்பவள்
உத்தமத் தாய்!   பிள்ளைகள் 
சிரித்தால்  அவளும் சிரிப்பாள்!
மரிப்பதில்லை தாய்மை மனம்!


31-5-2016





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

423 (962) ஊடகம் -- தடம் தீட்டு