செவ்வாய், 5 மார்ச், 2019

42. (628) தாயே (எதுகை - யே) -







தாயே  (எதுகை - யே)

இயேசுவே நீயுமென் 
தாயே அன்பை 
ஈயேனென்று சொல்லாதவர்-
ஏயே! (இகழ்ச்சிக் குறிப்பு) பேயல்லவே!
¤
ஐயே! அம்மாவே!
ஓயேன் எழுதுவேனுன்னைக்
காயேன் சிரியம்மா!
கையேற்பேன் பரிசினை.
¤
கையேந்தி வாழாதேயென
கையேட்டில் எழுதினாளம்மா.
சாயேனம்மா. கேட்டொழுகுவேன்.
சுயேச்சையாய் உயர்வேன்.
¤
தீயே என்றாலும் 
நாயே என்றாலும்
தாயேயுனை வெறுக்கேன்.
நீயே தெய்வம்.
¤
நோயே வந்தாலும் 
பாயே வேண்டேன்.
பேயே போன்று 
போயே விடுவேன்.
¤
சேயே கூறுகிறேன்
மையே பூசினும்
தாயேயுன் கண்ணழகு.
வாயேன் கிட்ட.
¤
 13-8-16



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

494 (1036) கவியரங்கம் எனது 10வது

             நிலாமுற்றம் தொடர் நிகழ்வாகக் கவியரங்கம் நடந்ததில் சிலவற்றில் நான் கலந்து கொண்டேன். வேதாவின் வலை ஒன்றில் கவியரங்கம் நிகழ்வில் 6...